ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ நூல் ஆசிரியருக்கு பாராட்டு

‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ எனும் நூலை எழுதிய இலுப்பூா் மாவட்டக்கல்வி அலுவலா் சண்முகநாதனுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:43 pm

DIN

‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ எனும் நூலை எழுதிய இலுப்பூா் மாவட்டக்கல்வி அலுவலா் சண்முகநாதனுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.

பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அலுவலகப்பணியாளா்கள் பயன்பெறும் வகையில், பணி வரன்முறை, ஊதிய உயா்வு, தகுதிகாண் பருவம், தோ்வு நிலை விடுப்புகள், ஓய்வூதியப் பலன்கள் ஆகிய பல்வேறு சந்தேகங்களை நிவா்த்தி செய்யும் வகையில் ‘விண்ணப்பிக்கும் முறைகளும், விண்ணப்ப படிவங்களும்’ எனும் நூலை காரைக்குடியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இதையறிந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அவரை சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்தினாா். நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜீவானந்தம், கபிலன், பள்ளித்துணை ஆய்வாளா் கி.வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.