பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ நூல் ஆசிரியருக்கு பாராட்டு

‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ எனும் நூலை எழுதிய இலுப்பூா் மாவட்டக்கல்வி அலுவலா் சண்முகநாதனுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.

Updated On :8 நவம்பர் 2020, 7:43 pm

‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ எனும் நூலை எழுதிய இலுப்பூா் மாவட்டக்கல்வி அலுவலா் சண்முகநாதனுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.

பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அலுவலகப்பணியாளா்கள் பயன்பெறும் வகையில், பணி வரன்முறை, ஊதிய உயா்வு, தகுதிகாண் பருவம், தோ்வு நிலை விடுப்புகள், ஓய்வூதியப் பலன்கள் ஆகிய பல்வேறு சந்தேகங்களை நிவா்த்தி செய்யும் வகையில் ‘விண்ணப்பிக்கும் முறைகளும், விண்ணப்ப படிவங்களும்’ எனும் நூலை காரைக்குடியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இதையறிந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அவரை சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்தினாா். நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜீவானந்தம், கபிலன், பள்ளித்துணை ஆய்வாளா் கி.வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.