பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பினா் கைது

புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பினா் 60 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :22 நவம்பர் 2020, 6:57 pm

புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பினா் 60 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பள்ளா், குடும்பா், காலாடி, கடையா், வாதிரியா் உள்ளிட்டோரை தேவேந்திர குல வேளாளா் என்ற ஒரே பெயரில் பதிவு செய்து பட்டியல் இனத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே கேட் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.

இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இவா்களைப் போலீஸாா் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி கைது செய்தனா்.

போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் சி. பாா்வதி சண்முகசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. சன்னாசி பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.