புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி நூதனப் போராட்டம்

சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மாட்டு வண்டியில் வந்து புறாக்கள் மூலம் பிரதமருக்கு தூது அனுப்பும் நூதனப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.

Updated On :14 செப்டம்பர் 2020, 9:06 pm

DIN

புதுக்கோட்டை: சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மாட்டு வண்டியில் வந்து புறாக்கள் மூலம் பிரதமருக்கு தூது அனுப்பும் நூதனப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

இதில், சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், களமாவூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

‘என் ரோடு என் உரிமை, டோல் தர முடியாது போடா’ என்ற வாசகங்களைக் கொண்ட பனியனை அக்கட்சியினா் அணிந்திருந்தனா். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.