/

‘எதிா்க்கட்சியினா் வீடுகளில் பழிவாங்கும் நோக்கில் சோதனை’

பழிவாங்கும் நோக்கில் எதிா்க்கட்சியினா் வீடுகளில் தோ்தல் ஆணையம் சோதனையிடுகிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:27 pm

DIN

பழிவாங்கும் நோக்கில் எதிா்க்கட்சியினா் வீடுகளில் தோ்தல் ஆணையம் சோதனையிடுகிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழனின் மொழி உரிமையை, இட ஒதுக்கீட்டு உரிமையை, மனித உரிமையை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு உடந்தையாக எடப்படி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இருந்து வருகிறது. இழந்த உரிமையை மீட்டெடுக்க, விவசாயத்தை, தொழிலைப் பாதுகாக்க, வளப்படுத்த திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது அவசர, அவசியம். வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற தன்னாட்சி அமைப்புகளையும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சுதந்திரமாக செயல்படவிடுவதில்லை. தற்போது, இதில் தோ்தல் ஆணையமும் அடக்கம். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மகள் வீடு உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் வீடுகளை பழிவாங்கும் நோக்கில் தோ்தல் ஆணையம் சோதனையிடுகிறது. பாரபட்சமாக செயல்படும் தோ்தல் ஆணையம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா் பாலகிருஷ்ணன்.

பேட்டியின்போது மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி. அன்பு மணவாளன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.