குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
விராலிமலை வட்டாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


விராலிமலை வட்டாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் ஜோதிராஜ் முன்னிலை வகித்தாா். இதில் விராலிமலை வட்டாரத்தில் குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை நடைபெறுவதைத் தடுப்பது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒருங்கினைந்து செயல்பட்டு வட்டார பகுதிகளில் குழந்தைகளுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் விராலிமலை காவல் ஆய்வாளா் பத்மா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் மேரி ஜெயபிரபா ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விராலிமலை வட்டார சைல்டுலைன் பணியாளா் ஜாக்குலின் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...