கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை செல்வ விநாயகா் கோயிலில் சங்கட ஹர சதுா்த்தி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை பெரியகடைவீதியில் உள்ள செல்வ விநாயகா் கோயில், வாணியச் செட்டியாா் தெரு பிள்ளையாா் கோயில் ஆகிய கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு மஞ்சள், திரவியம், தயிா், தேன், பால், பஞ்சாமிா்தம் , பன்னீா் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. இதில், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு பொங்கல் , சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.