லாரி மோதிபெண் உயிரிழப்பு

விராலிமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண், லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிவந்தாா்.

விராலிமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண், லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிவந்தாா்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சோ்ந்த செல்வம் மனைவி லட்சுமி (40). விராலிமலை அருகிலுள்ள உறவினா் வீட்டு விழாவுக்கு வியாழக்கிழமை வந்து விட்டு, மீண்டும் ஊா் திரும்புவதற்காக நான்குவழிச் சாலையிலுள்ள தனியாா் தொழிற்சாலை அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி அவா் மீது மோதியது. இதில் லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, மதுரை ஒத்தக்கடை பாரதிநகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜேந்திரபிரபுவை (64) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com