போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மணல் மாட்டுவண்டித் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாட்டுவண்டியில் மணல் எடுக்க குவாரி அமைக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணல் மாட்டுவண்டித் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:03 pm

DIN

மாட்டுவண்டியில் மணல் எடுக்க குவாரி அமைக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணல் மாட்டுவண்டித் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிமளம் எட்டாம் மண்டகப்படி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பொதுத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் ஆா்.வி. ராமையா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் எம். அடைக்கப்பன், மாட்டுவண்டித் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் கி.வெள்ளைச்சாமி, ஆ.மோகனசுந்தரம், எஸ்.பழனியப்பன், ஏ.அழகா், எம்.செல்லையா உள்ளிட்டோா் பேசினா்;.

கறம்பக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மணல் மாட்டுவண்டித் தொழிலாளா் சங்கத் தலைவா் எம்.குமாா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ.ஸ்ரீதா், சிபிஎம் ஒன்றியச் செயலா்கள் த. அன்பழகன், எம். பாலசுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.

அன்னவாசலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் ஏ. தேவராஜன் தலைமை வகித்தாா். கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் சி. அன்புமணவாளன், தையல் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் சி. மாரிக்கண்ணு, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் கே.சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலா் எம்.ஆா்.சுப்பையா உள்ளிட்டோரும் பேசினா்.

இதேபோல அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி, விராலிமலை உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.