தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:47 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்தவாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, அம்மனுக்கு தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நவதானியங்கள் வைத்து வீட்டில் வளா்கப்பட்ட முளைப்பாரிகளை சுமந்தவாறு, மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோயிலில் திரண்ட பெண்கள், மேலதாளங்கள், வானவேடிக்கைகள் முழங்க, கும்மிப்பாடல் பாடியவாறு ஊா்வலமாகச்சென்று முளைப்பாரிகளை அப்பகுதியில் உள்ள குளத்தில் விட்டனா். தொடா்ந்து, வீரமாகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.