சவூதி அரேபியாவில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலைக் கொண்டு வர, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூா் அருகிலுள்ள எம்.உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் பொ. ஆனந்தன் (30). இவருக்கு மனைவி இளஞ்சியம், மகள் பாண்டிச்செல்வி (9), மகன் பாஸ்கா் (4) உள்ளனா்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநா் பணிக்காக சவூதி அரேபியா சென்ற ஆனந்தன், கடந்த 7-ஆம் தேதி நேரிட்ட விபத்தில் உயிரிழந்தாா். ஆனால், இதுவரை அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை.
எனவே, மத்திய அரசு சவூதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரகம் மூலமாக ஆனந்தனின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவரது குடும்பத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

