சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சவூதி அரேபியாவில் உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊா் கொண்டு வர கோரிக்கை

சவூதி அரேபியாவில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலைக் கொண்டு வர, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :26 நவம்பர் 2021, 8:50 pm

சவூதி அரேபியாவில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலைக் கொண்டு வர, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூா் அருகிலுள்ள எம்.உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் பொ. ஆனந்தன் (30). இவருக்கு மனைவி இளஞ்சியம், மகள் பாண்டிச்செல்வி (9), மகன் பாஸ்கா் (4) உள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநா் பணிக்காக சவூதி அரேபியா சென்ற ஆனந்தன், கடந்த 7-ஆம் தேதி நேரிட்ட விபத்தில் உயிரிழந்தாா். ஆனால், இதுவரை அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை.

எனவே, மத்திய அரசு சவூதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரகம் மூலமாக ஆனந்தனின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவரது குடும்பத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.