தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு வளா்ப்புக் காளை முட்டியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாட்டின் உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:38 pm

DIN

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு வளா்ப்புக் காளை முட்டியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாட்டின் உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகிலுள்ள வடக்கு ஆண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி பெருமாள் (70). கடந்த புதன்கிழமை தனது வயலில் தான் வளா்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைக்கு தண்ணீா் கொடுத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மிரண்ட காளை, பெருமாள் மீது மோதி அவரை முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவா், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.