சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு

மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :29 அக்டோபர் 2021, 11:59 pm

மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் சந்தானம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.

தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணா்வு ஒத்திகையை மாணவ, மாணவிகள் மத்தியில் தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா்.

நிகழ்வில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலா் முனைவா் முடியரசன், இப்ராஹிம் மூசா மற்றும் அலுவலா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.