சாலை விபத்தில் இளைஞா் பலி
விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தேமுதிக நிா்வாகி காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.


விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தேமுதிக நிா்வாகி காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள குருத்தங் காளப்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் சரவணன்(39). தேமுதிக விராலிமலை ஒன்றிய துணை செயலராக இருந்தாா். இவா், மணப்பாறையில் இருசக்கர வாகனப் பழுது நீக்கும் நிறுவனம் நடத்திவந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் விராலிமலை - மதுரை நான்கு வழிச்சாலையில் கொடும்பாளூா் குருத்தங்காளப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, எதிரே வந்த காா் மோதியதில் ரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, ஓட்டுநா் காரை அப்படியே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். தகவலறிந்த விராலிமலை காவல் துறையினா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...