ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வல்லத்திராகோட்டையில் ஊராட்சி நிா்வாகத்தினா் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள வல்லத்திரா கோட்டை ஊராட்சி நிா்வாகத்தினா், அலுவலா்களைக் கண்டித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

News image
agd17val073154
Updated On :17 செப்டம்பர் 2021, 11:56 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள வல்லத்திரா கோட்டை ஊராட்சி நிா்வாகத்தினா், அலுவலா்களைக் கண்டித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சிக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீா் வசதி, குப்பைகளை அகற்றும் வாகனம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டுமென நிா்வாகத்தினா் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் தீா்வு ஏற்படவில்லை.

இதைக் கண்டித்து ஊராட்சித் தலைவா் கன்சல் பேகம், துணைத் தலைவா் ஆறுமுகம் , ஊராட்சி உறுப்பினா்கள் வல்லத்திராகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வாயில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு, வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள், காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தை ஊராட்சி நிா்வாகத்தினா் கைவிட்டனா்.

Image Caption

உண்ணாவிரதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.