ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுக்கோட்டை முழுவதும் ஏராளமான கல் குவாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே ஆயிரக்கணக்கான மரண பள்ளத்தாக்குகளாக கல் குவாரிகள் உள்ளன என குற்றம்சாட்டினாா்

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே ஆயிரக்கணக்கான மரண பள்ளத்தாக்குகளாக கல் குவாரிகள் உள்ளன என குற்றம்சாட்டினாா் தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலரும் திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுபாவா பள்ளிவாசல், மெய்யபுரம், பழந்தினாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து அறிந்த தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன் வியாழக்கிழமை மெய்யபுரத்துக்கு வந்து கல்குவாரியைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மலைகளை அழித்து விட்டால் மழை பெய்யாமல் பூமி வடு விடும். கனிமவளக் கொள்ளை அரசாங்கத்தின் ஆதரவுடன் தாண்டவமாடுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே ஆயிரக்கணக்கான மரணப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டமும் கனிம வளக் கொள்ளையில் முதன்மை மாவட்டமாகத் திகழ்கிறது. மக்கள் போராட்டங்களையும் மீறி இங்கு கல்குவாரி செயல்பட அனுமதித்தால் மக்களை காப்பாற்றப் போராடுவேன் என்றாா் கௌதமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.