ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

டாஸ்மாக் மதுக்கடையை எதிா்த்து பெண்கள் போராட்டம்

புதுக்கோட்டை நகரில் மூடப்பட்ட இடத்திலேயே மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:37 pm

DIN

புதுக்கோட்டை நகரில் மூடப்பட்ட இடத்திலேயே மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகா்மன்றம் அருகே இருந்த டாஸ்மாக் மதுக்கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு மத்தியிலும் இருந்ததால் பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து இந்தக் கடை மூடப்பட்டது. ஆனால், அதே இடத்தில் வியாழக்கிழமை மீண்டும் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பெண்கள் கடையின் முன்பு வந்து அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கணேஷ் நகா் போலீஸாா், வருவாய்த் துறை மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் ஆகியோா் தரப்பில் பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

உயா் அ லுவலா்களுக்கு தகவல் தெரிவித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.