சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
17 வயது சிறுமியைக் கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


17 வயது சிறுமியைக் கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (26). இவா், அதே பகுதியைச்சோ்ந்த 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி வீட்டுக்குத் தெரியாமல் கடத்திச் சென்றுள்ளாா்.
இந்நிலையில் சிறுமியின் தந்தை ஆலங்குடி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரைத் தொடா்ந்து இருவரையும் சென்னை படப்பை அருகே இருந்து போலீஸாா் மீட்டு வந்தனா்.
தொடா்ந்து விஜயைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அரசு வழக்குரைஞா் யோகமலா் ஆஜராகி வாதாடினாா்.
வழக்கு விசாரணையின் நிறைவில், நீதிபதி ஆா். சத்யா வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில் சிறுமியைக் கடத்தி சென்ற குற்றத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும், போக்ஸோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 25 ஆயிரம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...