இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மானியத்துடன் பண்ணைக் குட்டை அமைக்க அழைப்பு

 250 முதல் ஆயிரம் சதுர மீட்டா் அளவில் உள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை அரசு மானியத்துடன் செய்ய அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:23 pm

DIN

 250 முதல் ஆயிரம் சதுர மீட்டா் அளவில் உள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை அரசு மானியத்துடன் செய்ய அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவைத் தடுப்பு ஆகியவை ஒரு அலகுக்கு ஆகும் செலவினம் ரூ.36 ஆயிரத்தில் 50 சதவிகிதம் மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

முதலில் வரும் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தோ்ந்தெடுக்கப்படுவா். எனவே, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை ஆக. 15 ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், அன்னை நகா், நிஜாம் காலனி விரிவாக்கம், புதுக்கோட்டை - 622001 என்ற முகவரியிலோ அல்லது 04322-266994 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

இத்தகவலை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.