மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

புதுகையில் 101 பயனாளிகளுக்கு ரூ.27.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விடுதலைத் திருநாள் விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, 101 பயனாளிகளுக்கு ரூ. 27.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News image

காவல்துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே.

Updated On :15 ஆகஸ்ட் 2022, 11:27 am IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படைத் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற விடுதலைத் திருநாள் விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, 101 பயனாளிகளுக்கு ரூ. 27.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காலை 9 மணிக்கு விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியேற்றி வைத்து, சமாதானப் புறாக்களையும், மூவண்ணம் கொண்ட பலூன்களையும் பறக்கவிட்டார்.

தொடர்ந்து, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற 20 தியாகிகளின் வாரிசுகளை ஆட்சியர் சிறப்பித்தார். மேலும், அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய 609 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பல்வேறு துறைகளின் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ. 27.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

இவ்விழாவில், 10 பள்ளிகளைச் சேர்ந்த 901 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பை ஆட்சியர் கவிதா ராமு பார்வையிட்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.