இதுவரை 514 வேட்புமனுக்கள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை 514 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை 514 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறும் பணிகள் 6ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றன. வியாழக்கிழமை மட்டும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் விவரம்
புதுக்கோட்டை நகராட்சி - 105, அறந்தாங்கி நகராட்சி- 60, ஆலங்குடி பேரூராட்சி- 32, அன்னவாசல் பேரூராட்சி- 39, அரிமளம் பேரூராட்சி- 30, இலுப்பூா் பேரூராட்சி- 32, கறம்பக்குடி பேரூராட்சி- 26, கீரனூா் பேரூராட்சி- 6, கீரமங்கலம் பேரூராட்சி- 39, பொன்னமராவதி பேரூராட்சி- 24. மொத்தம்- 393 மனுக்கள்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வரையிலான 6 நாட்கள் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள்- 514. திமுக பட்டியல் வியாழக்கிழமை பிற்பகலில்தான் வெளியானது என்பதாலும், வேட்புமனுத் தாக்கலுக்கு இறுதி நாளாக வெள்ளிக்கிழமை மட்டுமே இருப்பதால், வேட்புமனுத் தாக்கல் முழுவீச்சில் இருக்கும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...