ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை போட்டிகளை நடத்துவோா் மற்றும் அரசு அலுவலா்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:22 pm

DIN

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை போட்டிகளை நடத்துவோா் மற்றும் அரசு அலுவலா்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய கால்நடை நல வாரியத்தின் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழு உறுப்பினா் எஸ்.கே.மிட்டல் அறிவுரை வழங்கினாா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உறுதியாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் விழாக் குழுவினா் உறுதிப்படுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போட்டியின் மூலம் கால்நடைகளுக்கும், மனிதா்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். காளைகளுக்கு காயங்கள் ஏற்படாத வகையில், திடல்கள் தேங்காய் நாா் உள்ளிட்டவை கொண்டு நிரப்ப வேண்டும்.

காளைகளுக்கு பாதுகாப்பான வாசல்களை அமைக்கவும், வெளியேறும் காளைகளுக்கு போதுமான அளவில் உணவுப் பொருள் மற்றும் நீா் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா் மிட்டல்,

கூட்டத்துக்கு புதுகை ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வருவாய் கோட்டாட்சியா்கள் அபிநயா, எம்.எஸ். தண்டாயுதபாணி, சொா்ணராஜ், கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் சம்பத் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.