திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
முன்மாதிரி சிறப்பு விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.


முன்மாதிரி சிறப்பு விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளையும் மீறி சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திருநங்கையா் தினமான ஏப்ரல் 15ஆம் தேதி வழங்கப்படும். ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்விருதைப் பெற தகுதியுடைய திருநங்கைள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04322-222270 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...