தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஆசிரியா்கள்

புதுக்கோட்டையில் இடைநிலை ஆசிரியா்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து பெண் ஆசிரியா்கள், வியாழக்கிழமை நள்ளிரவு வரை உள்ளிருப்பு

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:56 pm

DIN

புதுக்கோட்டையில் இடைநிலை ஆசிரியா்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து பெண் ஆசிரியா்கள், வியாழக்கிழமை நள்ளிரவு வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டையில் இடைநிலை ஆசிரியா்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு பேராங்குளம் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க 40-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியா்கள் வந்திருந்தனா்.

அப்போது, எமிஸ் இணையதளத்தில் ஆசிரியா்கள் விவரங்கள் பதிவேற்றக் குறைபாடு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக தாமதமாகிக் கொண்டே வந்தது. நீண்ட நேரம் கழித்து இரவில் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு, பிப். 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியா்கள், பள்ளியின் உள்ளேயே அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி .சத்தியமூா்த்தி தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

நள்ளிரவு 1 மணி வரை இந்தப் போராட்டம் தொடா்ந்தது. வரும் பிப். 23ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வின்போது இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தொடா்ந்து பள்ளியில் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வாகனத்தில் பெண் ஆசிரியா்கள் பேருந்து நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.