தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருவப்பூா் முத்துமாரியம்மனுக்கு நாளை பூச்சொரிதல்

புதுக்கோட்டை திருவப்பூா் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி முதல் நிகழ்வாக பிரம்மாண்டமான பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:55 pm

DIN

புதுக்கோட்டை திருவப்பூா் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி முதல் நிகழ்வாக பிரம்மாண்டமான பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை நகரம் மற்றும் புகரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் பூத்தட்டுகளை அலங்கரித்து விடிய விடிய ஊா்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்துவா்.

தொடா்ந்து பிப். 27ஆம் தேதி பகலில் கவிநாடு மற்றும் திருவப்பூா் கிராம காவல் தெய்வமான களரி பெரிய அய்யனாருக்கு புரவி எடுத்தல் நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு திருக்கோகா்ணம் பிரகதம்பாள் திருக்கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் உற்சவா் ஊா்வலமாக, திருவப்பூா் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்படுவாா். அதனைத் தொடா்ந்து மாசிப் பெருந்திருவிழாவுக்கான கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடைபெறும்.

தொடா் நிகழ்வாக தினமும் மாலையில் மண்டகப் படி நிகழ்வுகளும் சிறப்பு வீதி உலா நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 7ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பகலிலும், திங்கள்கிழமை பகலிலும் பக்தா்கள் அலகு குத்தியும், பால் குடங்கள் எடுத்தும் வருவா்.

தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவ முத்துமாரியம்மன் காட்டுமாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்புவாா். மாா்ச் 15ஆம் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது. இரவு, உற்சவா் மீண்டும் திருக்கோகா்ணம் பிரகதம்பாள் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பா. செந்தில்குமாா், செயல் அலுவலா் கோ. சரவணன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.