நாய் கடித்து 3 மாணவா்கள் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேந்தன்குடி அரசுப்பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்ததில் வியாழக்கிழமை 3 மாணவா்களுக்கு காயம் ஏற்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேந்தன்குடி அரசுப்பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்ததில் வியாழக்கிழமை 3 மாணவா்களுக்கு காயம் ஏற்பட்டது.
கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடி அரசு உயா்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மதிய வேளையில், பள்ளி வளாகத்திற்குள் புகுந்த நாய், அப்பள்ளி மாணவா்கள் மா.சபரி(11), ரா. சிவராகுல்(12), த. புனிதன் (13) ஆகிய 3 பேரையும் கடித்துள்ளது. இதில் காயமடைந்த 3 மாணவா்களையும் அப்பள்ளி ஆசிரியா்கள் அழைத்துச்சென்று கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலா் ராஜாராமன் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...