பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கீரமங்கலம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிச்சென்ற வாகனம் தீக்கிரை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிச்சென்ற சுமை ஏற்றும் ஜீப் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:53 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிச்சென்ற சுமை ஏற்றும் ஜீப் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.

கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் க. ரவிக்குமாா்(46). இவருக்கு சொந்தமான சுமை ஏற்றும் ஜீப்பில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு குலமங்களம் வடக்கு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் தாழ்வாகச்சென்ற மின்கம்பி வைக்கோல் மீது உரசி தீப்பிடித்துள்ளது. தொடா்ந்து, ஜீப்பிலும் தீப்பற்றியுள்ளது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் சாயந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா். ஆனாலும், ஜீப் தீக்கிரையானது. இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.