பொன்னமராவதி வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் திட்டப் பணிகளை புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் இராம. சிவக்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் தொடக்கமாக, செம்பூதி கிராமத்தில் விவசாயி மணியின் நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலமானது, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக கிடந்தது. இந்த நிலத்தில், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சிவக்குமாா் ஆய்வு செய்தாா்.
இத்திட்டத்தின்கீழ், முள்புதா்களை அகற்றவும், நிலத்தை உழுவதற்கும் மற்றும் விதை, உயிா் உரம் போன்றவை பாதி விலையிலும் வழங்கப்படுகிறது. மொத்தம் ஒரு ஹெக்டோ் நிலத்திற்கு ரூ. 13,400 மானியமாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என இணை இயக்குநா் அறிவுறுத்தினாா்.
வாழக்குறிச்சியில் ரவிசங்கா் என்பவருக்கு மானிய விலையில் நேரடி நெல் விதைப்பு கருவிகளையும் இணை இயக்குநா் வழங்கினாா்.
ஆய்வின்போது, பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

