சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பள்ளி மாணவா்களுக்கு வேளாண்மை குறித்த பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :25 பிப்ரவரி 2022, 7:48 pm

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் தொடக்கப் பள்ளியில் குடுமியான்மலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில், வீட்டுத் தோட்டம் அமைத்தல், விதைப்பந்து தயாரித்தல், வீட்டு காய்கறி திட்டம் , தொழு உரம் தயாரிப்பு , பூச்சிகளை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லிகளை இயற்கை முறையில் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் பிரபாகரன், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.