ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆடு திருடிய 2 போ் கைது

புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை பகுதிகளில் ஆடு திருடிய இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:48 pm

DIN

புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை பகுதிகளில் ஆடு திருடிய இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து ஆடு திருட பயன்படுத்தப்பட்ட காா் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை அருகே வாமடாகொல்லையைச் சோ்ந்த ரங்கசாமி மகன் முருகேசன் (41). சுந்தம்பட்டி அருகே முள்ளிக்காப்பட்டியைச் சோ்ந்த ராஜா மகன் குமாா் (24). இவா்கள் 2 பேரும் இரவு நேரங்களில் காா் மற்றும் மோட்டாா் சைக்கிள்களில் சென்று ஆடுகளைத் திருடி வந்துள்ளனா்.

ஏற்கெனவே ஆடு திருடா்களைப் பிடிக்க திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தா் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் வீரமணி தலைமையிலான தனிப்படையினா், முருகேசன், குமாா் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து காா் ஒன்றும், 2 இரு சக்கர வாகனங்களும் மற்றும் திருடப்பட்ட 12 ஆடுகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.