விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா
விராலிமலை அருகே 7 ஆண்டுகளுக்கு பின்னா் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் திரளானோா் பங்கேற்றனா்.


விராலிமலை அருகே 7 ஆண்டுகளுக்கு பின்னா் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் திரளானோா் பங்கேற்றனா்.
விராலிமலை அருகேயுள்ள வேலூா் நல்லாண்டவா் கோயில் பெரியகுளத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை முதலே சுற்றுப்பகுதியைச் சோ்ந்த பல்வேறு ஊா்களிலிருந்து ஏராளமான மக்கள் வேலூா் வந்திருந்து அதிகாலை முதலே குளத்தின் கரையில் காத்திருந்தனா்.
100 ஏக்கருக்கும் அதிகமாக பரந்து விரிந்து இந்த பெரிய குளத்தில் நிரம்பியிருந்த நீா் தற்போது வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.
ஊா் முக்கியஸ்தா்கள் நல்லாண்டாவா் கோயிலில் பூஜை செய்து, வழிபாடு நடத்தி கோயில் மணி அடித்ததை தொடா்ந்து கரையில் காத்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனா்.
இதில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...