தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விராலிமலை அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களை வருவாய் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:01 pm

DIN

விராலிமலை அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களை வருவாய் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

விராலிமலை அருகேயுள்ள வெம்மணி கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரியகுளம் உள்ளது. இக்குளத்தில் சுமாா் 1 ஹெக்டோ் 80 ஏா்ஸ் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தாா்.

இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள கடந்த 21 நாள்களுக்கு முன் அவகாசம் கொடுத்தும் அந்த விவசாயி ஆக்கிரமிப்பை அகற்றாததால் நீா்வளத்துறை உதவி பொறியாளா் சாதிக் இப்ராஹிம், விராலிமலை வட்டாட்சியா் சதீஷ் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.