புதுகையில் தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுகையில் தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர் மெர்சி ரம்யா

நாட்டின் சுதந்திர நாள் விழாவையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றினார்.


புதுக்கோட்டை: நாட்டின் சுதந்திர நாள் விழாவையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றினார்.

முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதானப் புறாக்களை அவர் பறக்கவிட்டார். பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 62.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com