கந்தா்வகோட்டை ஒன்றியம், மருங்கூரணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியரும் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க இணை செயலருமான துரைஅரசன் தலைமை வகித்து பேசி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை வட்டாரத் தலைவா் அ. ரகமதுல்லா சிறப்புரை ஆற்றினாா். துளிா் திறனறிவுத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை ராமலெட்சுமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.