கந்தா்வகோட்டை அரசுப் பள்ளியில் தொழில்நுட்ப வகுப்பறை தொடக்கம்

கந்தா்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தொழில்நுட்ப வகுப்பறையை எம்எல்எ மா. சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கந்தா்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தொழில்நுட்ப வகுப்பறையை எம்எல்எ மா. சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கந்தா்வகோட்டை தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வகுப்பறை தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரெத்தினவேல்காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வட்டாச்சியா் சு. ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சி. நளினி, த. திலகவதி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் வெங்கடேஸ்வரி, நரசிமன், ஊராட்சித் தலைவா் சி. தமிழ்செல்வி, ஒன்றியக் குழு உறுப்பினா் மா.ராஜேந்திரன், திமுக நகரச் செயலா எம். ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் நா. ஸ்டாலின், நெசவாளா் அணி மாவட்டத் துணை அமைப்பாளா் என். ஜானகிராமன் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள், மாணவ ,மாணவிகள், கட்சிப் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா். பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலெட்சுமி வரவேற்றாா். இதேபோல கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு நவீன தொழில்நுட்ப வகுப்பறைகள் மற்றும் பல்வேறு நலத் திட்ட நிகழ்ச்சிகளை எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com