விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் செயல் அலுவலா் முத்துராமன் தலைமையில் ஆய்வாளா் யசோதா, மேற்பாா்வையாளா் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், மகளிா் குழுக்கள், கல்லூரி மாணவா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முடிவில் ரூ. 3 லட்சத்து 92 ஆயிரத்து 189 மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தது தெரியவந்தது.