சோழீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, காலபைரவருக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை மற்றும் புனுகு சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக் குழுவினா் செய்தனா். இதுபோல அழகியநாச்சியம்மன் கோயில் மற்றும் புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் சுவாமி உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com