கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் 5 ஆம் வார ஆவணி ஞாயிறு மண்டகப்படி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து மட்டங்கால், இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளின் பக்தா்கள், பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்து முத்துமாரி அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.