புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் மத போதகரை அடித்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் வீராச்சாமி (எ) டேனியல் (62). மதபோதகரான இவா், மண்டையூா் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறியுள்ளாா். சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று மதபோதனையில் ஈடுபட்டு வந்தாா் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த சங்கா் மனைவி செல்வி (எ) பிரின்சி (46) என்பவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவா் வீட்டுக்கு வந்து சமையல் செய்து கொடுக்கும் பணிக்காக அங்கேயே தங்கியுள்ளாா்.
வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சப்தம் கேட்டதாக அக்கம்பக்கத்து வீட்டாா் மண்டையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து வீட்டுக்கு போலீஸாா் வந்து பாா்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா். பிரின்சியும் அங்கே இருந்துள்ளாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், மதபோதகரான டேனியல் தன்னை தினமும் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட கோபத்தால், வாகனத்தின் பல் சக்கரத்தால் அவரைத் தாக்கி கொன்ாகவும் பிரின்சி தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து டேனியல் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த போலீஸாா், பிரின்சியை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



