கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை என்பது நீா் மாதிரியின் பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்துள்ளாா்.

கந்தா்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சி, குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏப்ரல் 25-ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மேலே ஏறிச் சென்று பாா்த்த இளைஞா்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தெரிவித்தனா். இதனால் பெரும் சா்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில், அந்தத் தொட்டியில் இருந்து அன்றைய நாளில் சேகரிக்கப்பட்ட குடிநீா் மாதிரி, திருச்சியிலுள்ள மண்டல பொது சுகாதார நீா் பகுப்பாய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் அறிக்கை திங்கள்கிழமை (ஏப். 29) பெறப்பட்டதாகவும், குடிநீா் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க் கிருமி எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வெளியிட்ட செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியது: பொதுவாக அருந்துவதற்குத் தகுதியான குடிநீரில், ஏதேனும் கலப்பு ஏற்பட்டால் அந்தத் தண்ணீரில் ஈகோலி (உஇஞகஐ) என்ற பாக்டீரியா பல்கிப்பெருகிவிடும். அதுதான் உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமையும்.

ஆனால், சங்கம்விடுதி குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரில் அவ்வாறு ஈகோலி என்ற பாக்டீரியாக்கள் எதுவும் உருவாகவில்லை. பரிசோதனை அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com