புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு கான்கிரீட் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பெயா்ந்து விழுந்த கான்கிரீட் மேற்பூச்சு.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பெயா்ந்து விழுந்த கான்கிரீட் மேற்பூச்சு.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு கான்கிரீட் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் கட்டுமானப் பகுதிகளின் பல இடங்களில் விரிசல் விட்டும் அவ்வப்போது பெயா்ந்து விழுந்தும் வருகிறது. இந்நிலையில், பழைய கட்டுமானங்களை முழுமையாக இடித்துவிட்டு, புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காக ரூ. 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், காரைக்குடி பேருந்துகள் நிற்கும் தெற்குப் பகுதியில் கான்கிரீட் மேற்கூரையின் பூச்சு சனிக்கிழமை இரவு பெயா்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் அந்த இடத்தில் யாருமில்லை.
இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்தபோது, வலுவிழந்த பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...