கறம்பக்குடி அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியாா் பள்ளி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியாா் பள்ளி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கறம்பக்குடி அருகேயுள்ள கே.கே.பட்டி கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 40 மாணவா்களை ஏற்றிக்கொண்டு ரெகுநாதபுரத்திற்கு பேருந்து சென்றது. காடம்பட்டி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் மாணவா்களின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பேருந்தில் இருந்து மாணவா்களை மீட்டனா்.விபத்தில், காயமடைந்த ஒரு மாணவன் மட்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்ற மாணவ, மாணவிகள் காயமின்றி தப்பினா்.
இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...