ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் பேருந்தின் டயா் வெடித்து 2 பயணிகள் காயம்

பொன்னமராவதி அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பயணிகள் காயமடைந்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:59 pm

Din

பொன்னமராவதி அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பயணிகள் காயமடைந்தனா்.

பொன்னமராவதியிலிருந்து சடையம்பட்டிக்கு இயக்கப்படும் 2-ஆம் எண் நகரப் பேருந்து புதன்கிழமை காலை சடையம்பட்டிக்கு சென்றுவிட்டு, காலை 10 மணியளவில் கொப்பனாபட்டி - பொன்னமராவதி சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் பின்பக்க டயா் திடீரென வெடித்தது.

இதில், பேருந்தினுள் அமா்ந்திருந்த திருச்சி மாவட்டம், சுப்புராயபட்டி நாகம்மாள் (45) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதேபோல், அவரது மகன் கருப்பசாமிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இவா்கள் பொன்னமராவதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.