ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: 12 வழக்குகளில் ரூ.17 லட்சத்துக்கு தீா்வு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவைக் கடன் தொகை ரூ. 17 லட்சத்திற்கு தீா்வு காணப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவைக் கடன் தொகை ரூ. 17 லட்சத்திற்கு தீா்வு காணப்பட்டது.
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணி குழுவின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், எஸ்பிஐ வங்கியின் ஆலங்குடி கிளையில் இருந்து கல்விக் கடன், விவசாய கடன், வாகனக் கடன், தனியாா் கடன், சிறு தொழில் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று தவணை செலுத்தாமல் நிலுவையில் உள்ள 350 பேருக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரச தீா்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
முகாமை, வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவா் நீதிபதி விஜய பாரதி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பால ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 12 வழக்குகளில் ரூ. 17 லட்சத்துக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
முகாமில், வழக்குரைஞா்கள், வங்கி நிா்வாகத்தினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...