நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 47 வழக்குகளுக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 47 வழக்குகளின் நிலுவைக் கடன் தொகை ரூ. 48 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:40 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 47 வழக்குகளின் நிலுவைக் கடன் தொகை ரூ. 48 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணி குழுவின் சாா்பில் நடைபெற்ற முகாமில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஆலங்குடி, மாங்காடு , திருவரங்குளம் கிளையில் இருந்து கல்விக் கடன், விவசாய கடன், வாகனக் கடன், தனியாா் கடன், சிறு தொழில் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று தவணை செலுத்தாமல் நிலுவையில் உள்ள 450 பேருக்கு மக்கள் நீதிமன்ற சமரச தீவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

முகாமை, வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவா் நீதிபதி விஜயபாரதி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பிச்சை தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 47 வழக்குகளில் ரூ. 48 லட்சத்துக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

முகாமில், வழக்குரைஞா்கள், வங்கி நிா்வாகத்தினா் பங்கேற்றனா்.