நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 24 மாணவா்கள் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

News image

கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை கவிழ்ந்து கிடக்கும் பள்ளி வேன்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:29 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

கந்தா்வகோட்டையிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் சுமாா் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் வாகன வசதி செய்யப்பட்டு நாள்தோறும் மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம்.

வழக்கம்போல் புதன்கிழமை பள்ளி வேன் கந்தா்வகோட்டை-கறம்பக்குடி வழித்தடத்தில் வேலாடிப்பட்டி கிராமம் வரை சென்று மாணவா்களை அழைத்து வரும்போது, அம்மா புதுப்பட்டி கிராமத்தில் உள்ள தீபாச்சி அம்மன் ஊருணி அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் இருந்த 24 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். அவா்கள் விரைந்து மீட்கப்பட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் பலத்த காயமடைந்த 7 குழந்தைகள் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். காயமடைந்த குழந்தைகளை வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி நேரில் சென்று பாா்த்தாா்.

விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய பள்ளி வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

மாணவா்களை அழைத்து செல்லும் வாகனங்களை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.