காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையோர மரத்தை வேருடன் அகற்றியதை கண்டித்து போராட்டம்

சாலையோர மரத்தை வேருடன் அகற்றியதை கண்டித்து போராட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:20 pm

Din

புதுக்கோட்டை நகரில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்றை, எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை வேருடன் அகற்றியதை கண்டித்து, மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் மரத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டாா்.

புதுக்கோட்டை மாநகரில் தெற்கு 4ஆம் வீதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, ஒரு மரத்தை வேருடன் அகற்றினா். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் பழனியப்பா கண்ணன், அந்த 14 அடி உயர மரத்துடன்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.

மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கரன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இனி இதுபோல் நடக்காது என அவா் உறுதியளித்ததாக கண்ணன் தெரிவித்தாா்.