கஞ்சா விற்ற 3 சிறுவா்கள் கைது
புதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 3 சிறுவா்களை வெள்ளனூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On :25 டிசம்பர் 2024, 9:00 pm

புதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 3 சிறுவா்களை வெள்ளனூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் அருகே கிளியூா் பிரிவு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வெள்ளனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் புதன்கிழமை அங்கு சென்ற போலீஸாா், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 சிறுவா்களைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், 2 இரு சக்கர வாகனங்களும், கைப்பேசிகளும் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 3 பேரும் இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தின் முன்பு ஆஜா்படுத்தப்பட்டு, சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்டனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...