தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கஞ்சா விற்ற 3 சிறுவா்கள் கைது

புதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 3 சிறுவா்களை வெள்ளனூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 9:00 pm

Din

புதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 3 சிறுவா்களை வெள்ளனூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் அருகே கிளியூா் பிரிவு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வெள்ளனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் புதன்கிழமை அங்கு சென்ற போலீஸாா், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 சிறுவா்களைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், 2 இரு சக்கர வாகனங்களும், கைப்பேசிகளும் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 3 பேரும் இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தின் முன்பு ஆஜா்படுத்தப்பட்டு, சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்டனா்.