மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பொன்னமராவதி கோயில்களில் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு

பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள கோயில்களில் மாா்கழி மாத 16-ஆம் நாள் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:09 pm

Din

பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள கோயில்களில் மாா்கழி மாத 16-ஆம் நாள் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினா் திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம் உள்ளிட்ட பாசுரங்களைப்பாடினா். இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

வேகுப்பட்டி கல்யாண வெங்கேடசுவரா் கோயிலில் அதிகாலையில் சுப்ரபாத சேவைகள் மற்றும் சாற்றுமுறைகள் திருப்பாவை பாராயணத்துடன் நடைபெற்றது. கல்யாண வெங்கடேசுவரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதேபோல புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், பாலமுருகன் கோயில, வலையபட்டி மலையாண்டி கோயில், தேனிமலை சுப்பிரமணியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.