விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு

தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

விராலிமலை: தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி சோதனைச்சாவடியில் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலா்தூவி தேமுதிகவினா் அஞ்சலி செலுத்தினா்.தொடா்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினா்.

இதில், மாவட்ட செயலாளா் காா்த்திகேயன், ஒன்றிய செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com