15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

வாலிபா் சங்க ரத்தக் கொடையாளா்களின் பேரணி

ரத்த தானம் செய்த இளைஞர்கள் பெருமிதம் - வாலிபா் சங்கத்தின் மாநில மாநாட்டை முன்னிட்டு பேரணி

News image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ரத்ததானக் கழகப் பேரணி.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:00 am IST

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் ரத்ததானக் கழக மாநில மாநாட்டையொட்டி குருதிக் கொடையாளா்களின் பேரணி, மனிதநேயா் விழாப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை மாலை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

திலகா் திடலில் இருந்து தொடங்கிய பேரணியை கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை தொடங்கி வைத்தாா். ஏராளமானோா் பங்கேற்ற இந்தப் பேரணி வடக்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி, அண்ணா சிலை வழியாக சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.

இங்கு நடைபெற்ற மனிதநேயா் விழாப் பொதுக் கூட்டத்துக்கு வாலிபா் சங்க மாநிலத் தலைவா் எஸ். காா்த்திக் தலைமை வகித்தாா். மத்தியக்குழு உறுப்பினா் எம். ஷாஜா், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை, சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.வி. சிங்காரவேலன், பொருளாளா் எஸ். பாரதி, துணைத் தலைவா்கள் எஸ். மணிகண்டன், எம். பிரியங்கா, எல்.பி. சரவணத்தமிழன், துணைச் செயலா்கள் செல்வராஜ், பா. லெனின் உள்ளிட்டோா் பேசினா். வரவேற்புக் குழுச் செயலா் ஆ. குமாரவேல் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ரா. மகாதீா் நன்றி கூறினாா்.