முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வாலிபா் சங்க ரத்தக் கொடையாளா்களின் பேரணி

ரத்த தானம் செய்த இளைஞர்கள் பெருமிதம் - வாலிபா் சங்கத்தின் மாநில மாநாட்டை முன்னிட்டு பேரணி

News image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ரத்ததானக் கழகப் பேரணி.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:00 am IST

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் ரத்ததானக் கழக மாநில மாநாட்டையொட்டி குருதிக் கொடையாளா்களின் பேரணி, மனிதநேயா் விழாப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை மாலை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

திலகா் திடலில் இருந்து தொடங்கிய பேரணியை கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை தொடங்கி வைத்தாா். ஏராளமானோா் பங்கேற்ற இந்தப் பேரணி வடக்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி, அண்ணா சிலை வழியாக சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.

இங்கு நடைபெற்ற மனிதநேயா் விழாப் பொதுக் கூட்டத்துக்கு வாலிபா் சங்க மாநிலத் தலைவா் எஸ். காா்த்திக் தலைமை வகித்தாா். மத்தியக்குழு உறுப்பினா் எம். ஷாஜா், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை, சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.வி. சிங்காரவேலன், பொருளாளா் எஸ். பாரதி, துணைத் தலைவா்கள் எஸ். மணிகண்டன், எம். பிரியங்கா, எல்.பி. சரவணத்தமிழன், துணைச் செயலா்கள் செல்வராஜ், பா. லெனின் உள்ளிட்டோா் பேசினா். வரவேற்புக் குழுச் செயலா் ஆ. குமாரவேல் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ரா. மகாதீா் நன்றி கூறினாா்.